கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சைக்காக 4 வகையாக பிரிக்கப்படுவர் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். அதில்,
1. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் உயர்ரக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர்,
2. குறைந்த அறிகுறிகளோடு மருத்துவ வசதி தேவைப்படுபவர்கள் கோவிட் ஹெல்த் சென்டர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
3. அறிகுறி இல்லாமல் மிக குறைந்த அளவு பாதிப்பு உள்ளவர்கள் கோவிட் கேர் சென்டர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
4. அறிகுறிகள் குறைவாக இருந்து வீட்டில் வசதி உள்ளவர்கள் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்படுவர்.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
No comments:
Post a Comment