தெலுங்கானாவில் 120 அடி ஆழ்துளைகிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை பலி - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 28, 2020

தெலுங்கானாவில் 120 அடி ஆழ்துளைகிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை பலி


தெலுங்கானாவில் விவசாய நிலத்தில் தோண்டப்பட்ட 120 அடி ஆழ்துளைகிணற்றில் விழுந்த குழந்தை பலி.





தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டத்தில் உள்ள பாப்பனபெட் என்ற கிராமத்தில் விவசாய பயன்பாட்டிற்காக ஆழ்த்துளை கிணறு அமைக்க 120 அடி ஆழத்திற்கு தோண்டியுள்ளனர் .நேற்று மாலை 5 மணி அளவில் அதன் அருகில் நின்றுகொண்டிருந்த சாய் வர்தன் என்ற மூன்று வயது சிறுவன் தவறி விழுந்துவிட்டான்.





குழந்தை சிக்கியிருக்கும் ஆழ்துளை கிணற்றுக்கு தொடர்ந்து ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு,கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது .குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்புக்குழு,தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினர் கடுமையாக போராடினர்.எனினும் எடுத்த அத்தனை முயற்சியும் பலனளிக்காமல் சிறுவன் உயிரிழந்துவிட்டான்.

இந்த ஆழ்துளை கிணறானது செய்வாய்க்கிழமை இரவுதான் தோண்டப்பட்டுள்ளது .120 அடி ஆழத்திற்கு தோண்டியும் தண்ணீர் வராததால் அவர்கள் மூடாமல் சென்றுள்ளனர் .இந்நிலையில் குழந்தை பலியானது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages